Sardar: கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சர்தார் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் சீமான்.

Sardar: கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சர்தார் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் சீமான். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சர்தார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது சர்தார் திரைப்படம். இந்நிலையில் சர்தார் படத்தை இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் புகழ்ந்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சர்தார் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இதை படம் என்று சொல்ல முடியாது படிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன். தண்ணீர் மிகப்பெரிய வியாபாரா பொருளா மாற்றப்பட்டு வருகிறது.

இது எவ்வளவு பெரிய பேராபத்து என்பது புரியவரும். இந்த படம் அதை அழமாக கூறியிருக்கிறது. இப்படி ஒரு படத்தை தயாரித்தது பெரிய விஷயம். இயக்குநர் பிஎஸ் மித்ரனுக்கு சமூக பொறுப்பு இருக்கு. படத்தில் அனைத்தும் நேர்த்தியாக உள்ளது. கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கும் இது நல்ல படம் என தெரிவித்துள்ளார் சீமான்.

PS 1: பாக்ஸ் ஆபிஸில் சூறாவளி வசூல்: 500 கோடியை நெருங்கும் ‘பொன்னியின் செல்வன்’.!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள‘பொன்னியின் செல்வன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது.

திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நடந்து வருகிறது ‘பொன்னியின் செல்வன்’ படம். பான் இந்தியா முறையில் உருவான இப்படம் முதல் நாள் உலகம் முழுக்க ரூ.78.29 கோடியையும், இரண்டாவது நாள் ரூ.60.16 கோடியையும், மூன்றாவது நாள் ரூ.64.42 கோடியையும் வசூலித்தது. ரசிகர்கள் மத்தியில் குறையாத வரவேற்பு இருந் காரணத்தால் வசூலில் சக்கை போடு போட்டு வந்தது இந்தப்படம்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இதுவரை உலக அளவில் 450 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீபாவளிக்கு வெளியாகும் புது படங்களின் வருகையால் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூல் குறையும் எனவும் வெளியாகியுள்ளன.

Zee tamil: கடைசி நிமிடத்தில் புஷ்பாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.பஞ்சாயத்தில் ஹெல்மெட் நபர் ஹெல்மெட்டை கழட்ட அது சங்கிலி என தெரியவர அனைவரும் ஷாக்காகின்றனர். இரங்கநாயகி சங்கிலியை மிரட்டி உண்மையை கேட்க அவன் பத்து லட்சம் பணத்தை திருடியது நான்தான் என்று ஒத்துக்கொள்கிறான்.
அப்போது வெற்றி கெத்தாக வந்து நின்று பார்க்க இரங்கநாயகி புஷ்பாவிடம் இனிமேல் வீட்டையும் மெஸ்ஸையும் கேட்டு மீனாட்சியை தொந்தரவு பண்ண கூடாது, அதோட இப்படி ஒரு தப்பு நடக்க காரணமான புஷ்பா மீனாட்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் என்று தீர்ப்பு சொல்கிறாள்.
தீர்ப்பை புஷ்பா மறுக்க ஊரே புஷ்பாவை எதிர்க்க வேறுவழியில்லாமல் புஷ்பா மீனாட்சி காலில் விழுந்துவிட்டு ஓடுகிறாள். பஞ்சாயத்து கூட்டம் கலைய அங்கு சக்தி வந்து அம்மா மீது கோவபட்டு செல்ல மீனாட்சி வருத்தப்பட்டு நிற்கிறாள்.
இரங்கநாயகி வீட்டில் சரண்யா காத்திருக்க வெற்றி நண்பர்களுடன் வந்து பஞ்சாயத்தில் நடந்த விசயங்களை சொல்ல அவள் எப்படி உண்மையை ஒத்துகிட்டா என கேட்க வெற்றி ஃப்ளாஷ் பேக்கில் நடந்த விஷயங்களை சொல்கிறான்.

இந்த பக்கம் புஷ்பா தன் வீட்டில் மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்ற அனைவரும் தடுக்க என் மானம் போச்சே என சங்கிலியை அடித்து அழுகிறாள். பஞ்சாயத்தில் அசிங்கப்பட்ட புஷ்பா மீனாட்சியை பழிவாங்க அடுத்து என்ன செய்யப் போகிறாள்? மீனாட்சி சக்தியை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை அறிய தவறாமல் மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்.

PS 1: இரண்டு கதாபாத்திரங்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிய சூர்யா, ஜோ: யார் யாருக்குன்னு தெரியுமா.?

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த ஜெயம் ரவி, த்ரிஷா கதாபாத்திரங்களுக்கு பூங்கொத்தை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள‘பொன்னியின் செல்வன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் 300 கோடி ரூபாய் வசூலை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்து வருகிறது.

இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நடந்து வருகிறது ‘பொன்னியின் செல்வன்’ படம். ரஜினி, ஷங்கர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் கார்த்தி, ஜெயம் ரவியுடன் சேர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்த்த கமல் படக்குழுவினரை பாராட்டி தள்ளியுள்ளார்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும், படத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் கேரக்டரில் நடித்த திரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்து அழகிய மலர் கொத்தை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர். இதனை த்ரிஷாவும், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அவர்களின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.