Breaking News


Warning: sprintf(): Too few arguments in /var/www/cineglit.in/data/www/cineglit.in/wp-content/themes/newsreaders/assets/lib/breadcrumbs/breadcrumbs.php on line 252

கௌதம் மேனன் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொள்ளாத விஜய்..இதுதான் காரணமா ?

வாரிசு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரமின் வெற்றி அவரை இந்தியளவில் பிரபலமான நடிகராக மாற்றியது. இதைத்தொடர்ந்து அவர் விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது.

பொதுவாக இருக்கும் விஜய் படங்களை காட்டிலும் லியோ படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதற்கு மிக முக்கிய காரணம் லோகேஷ் தான். மேலும் மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் அம்சங்களை இணைத்த லோகேஷ் இம்முறை லியோ படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் உருவாக்கி வருகின்றார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாக இப்படத்தின் பூஜை துவங்கும் முன்பே பல கோடிக்கு வியாபாரமாகியுள்ளது. மேலும் இந்த எதிர்பார்ப்பையும் மீறி லோகேஷ் தரமான படத்தை விஜய்க்கு கொடுப்பார் என ரசிகர்களால் நம்பப்பட்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோ கடந்த மாதம் வெளியான நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், கௌதம் மேனன், மிஸ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தில் மிஸ்கின் தன் பகுதி படப்பிடிப்பை முடிந்துவிட்டதாக அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நினையில் சமீபத்தில் லியோ படப்பிடிப்பு தளத்தில் கௌதம் மேனனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் லோகேஷ் கனகராஜ் உட்பட படத்தில் பணியாற்றிவரும் பல கலைஞர்கள் இருந்தனர்.

ஆனால் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் இப்புகைப்படத்தில் இல்லை. மேலும் அவர்கள் கௌதம் மேனனின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என்ற தகவலும் பரவி வந்தது. இந்நிலையயில் லியோ படப்பிடிப்பில் இருந்து விஜய்யும் த்ரிஷாவும் ஓய்வில் இருப்பதால் அவர்கள் சென்னை வந்தடைந்தனர். அதன் காரணமாகவே தான் அவர்களால் கௌதம் மேனன் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.